தாராபுரம், ஆக.1 - தாராபுரம் அடுத்த மூலனூர் ஒத்தமாந்துறை பகுதியில் நடை பெற்ற மணல் திருட்டை தடுக்க சென்ற கன்னிவாடி வருவாய் ஆய் வாளர் மீது வேன் ஏற்றி கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. தாராபுரம் அடுத்த மூலனூர் ஒத்தமாந்துறை பகுதியில் மணல் கொள்ளை நடப்பதாக புதனன்று இரவு தாராபுரம் வட்டாட்சியர் ரவிச் சந்திரனுக்கு தகவல் வந்தது. இதைய டுத்து கன்னிவாடி வருவாய் ஆய் வாளர் கார்த்திக்குமார், கிராம உத வியாளர்கள் நீலமேகம், உதய குமார் ஆகியோருடன் ஒத்தமாந் துறை அருகே உள்ள நாகத்தம்மன் கோவில் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மணல் திருடும் கும்பல் மணல் மூட்டை களை ஏற்றிக்கொண்டு சென்றது. பின்தொடர்ந்து சென்றபோது ஒரு வீட்டில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அங்கு மணல் மூட்டைகளை ஆம்னி வேனில் மணல் திருடும் கும்பல் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதனை கார்த்திக்குமார் தனது செல்போ னில் படம் பிடித்துள்ளார். இதை பார்த்த மணல் திருட்டில் ஈடுபட்ட சுப்புராயன் (75), அவரது மகன் தனபால்(46), பேரன் முகிலன் (21) ஆகியோர் ஆத்திரமடைந்து செல் போனை பிடுங்கி உடைத்து அவரை கீழே தள்ளிவிட்டனர். பின்னர் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப் பட்ட ஆம்னி வேனில் ஏறிய 3 பேரும் கொலை செய்யும் நோக்கில் அவர் களை நோக்கி வேகமாக வந்தனர். வாகனம் வந்த வேகத்தை பார்த்து நீலமேகம், உதயகுமார் பயத்தில் ஒதுங்கிவிட வருவாய் ஆய்வாளர் மீது வேன் மோதியது. இதில் காயம டைந்த வருவாய் ஆய்வாளர் கார்த் திக்குமார் மூலனூர் காவல்துறை யினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மூலனூர் காவல் துறையினர் அவரை மீட்டு தாராபு ரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தாரா புரத்தில் உள்ள தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வருவாய் ஆய்வா ளர் கார்த்திக்குமார் அளித்த புகாரின் பேரில், மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் மீதும் மணல்திருட்டு, கொலைமுயற்சி உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளின் கீழ் மூலனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சுப்புராயனை கைது செய்த னர். தலைமறைவான தனபால் மற்றும் முகிலனை தேடிவருகின்ற னர். தாராபுரம் பகுதியில் ஏரண மேடு, கவுண்டையன்வலசு, உப்புத் துறைபாளையம், வீராட்சிமங்கலம் உள்ளிட்ட அமராவதி ஆற்றுப்படு கையில் விவசாய நிலங்களில் பாதை அமைத்து கனரக வாகனங் களை கொண்டு மணல் கடத்தி வரு கின்றனர். இதுகுறித்து உயர் அதி காரிகளுக்கு தகவல் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுப்ப தில்லை. இதனால் மணல் கொள் ளையர்கள் தைரியமாக மணல் எடுத்து வருகின்றனர். மேலும் தடுப் பவர்கள் மீது தாக்குதல் நடத்துவ தும் தொடர்ந்து வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின் றனர்.