tamilnadu

img

பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்குவதை கைவிடுக சாலைப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

அவிநாசி, ஆக. 25- நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்கு வதை கைவிட வேண்டும் என சாலைப் பணியாளர்கள் வலியு றுத்தியுள்ளனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க 7வது அவிநாசி உள்கோட்ட மாநாடு அவிநாசி தனியார் திரு மண மண்டபத்தில் சனியன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அவிநாசி உள்கோட்டத் தலை வர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் என்.சிவக்குமரன் துவக்கவுரை யாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக் கிளைத் தலைவர் பி.ரமேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.மணிவேல், கோட்டப் பொரு ளாளர் ஆர்.கருப்பன், கோட்டச் செயலாளர் ஆர்.ராமன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் தலைவர் எம்.பால சுப்பிரமணியன் நிறைவுறை யாற்றினார். இக்கூட்டத்தில், சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தைப் பணிக்காலமாக அறிவித்து ஆணை வெளியிட வேண்டும். பணியாளர்கள் அனைவரும் கடினமான கருவிகள் கையாள்வது, போக்குவரத்து நெரிசல்களுக்கிடையில் பணி யில் ஈடுபடும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளதால், ஊதியத்தில் 10 சதவிகிதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும். திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், பழனி, விருதுநகர் உள்ளிட்ட கோட்டங்களில் சாலை பராமரிப்புப் பணியைத் தனியாருக்கு வழங்கிய ஒப்பந் தத்தை ரத்து செய்து அரசு நடத்த வேண்டும். பணிகளுக்காக இரு சக்கர வாகனம், பேருந்துகள் உள்ளிட்டவற்றில் சென்று வரு வதால் பணியாளர்களுக்கு நிரந் தரப் பயணப்படி வழங்க வேண் டும். காலணி, சீருடை, மழைக் கால உடை, பாதுகாப்பு உப கரணங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்பன உள் ளிட்டத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.