தருமபுரி, மே 29- தருமரியை அடுத்த எர்ரணஹள்ளி கிராமத்தில் சீரான குடிநீர் வசதி இல்லாததால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட எர்ரணஹள்ளி ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு ஒகேனக்கல்லில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகி றது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இத னால் குடிநீர் விநியோகிக்கும் நாளில் ஒரே இடத்தில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் காலி குடங்களுடன் திரளுவதால் தள்ளு முள்ளு ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கும், ஒன்றிய நிர்வாகத்திற்கும் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், கிராமத்தில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. தங்களின் அடிப்படை தேவைக்குகூட தண்ணீர் இல்லாத தால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவரும் அவல நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற் கொண்டு ஒகேனக்கல் குடிநீரை கிராமத்திற்கு முறையாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.