tamilnadu

img

முதன்முறையாக விமானத்தில் பறந்த ஆதரவற்ற குழந்தைகள்

கோவை, நவ. 22- ஆதரவற்ற காப்பகங்களில் வசித்து வரும் குழந்தைகள் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரெயின் டிராப்ஸ் என்ற அமைப்பினர் சென்னையில் உள்ள வெவ்வேறு பகுதிக ளில் சர்வே ஒன்றை எடுத்தனர். இதில் குழந்தைகளின் ஆசைகள் என்னென்ன? என்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதில் பல குழந்தைகளும் தங்களுக்கு விமா னத்தில் பயணிக்க ஆசை இருப்பதாக தெரி வித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஆதர வற்ற காப்பகங்களில் வசித்து வரும் மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்ல முடிவு செய்தனர். இதனையடுத்து வெள்ளியன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக மாணவர்கள் கோவைக்கு அழைத்து வரப் பட்டனர். முதன்முறையாக விமானத்தில் பறந்த  மாணவர்கள் பரவசமடைந்து தங்க ளது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த மாணவர்களுடன் கண்பார்வையற்ற திருநங்கை ஒருவரும் விமான பயணம் செய்தார். இவர்களுடன் இசையமைப்பா ளர் ஏ.ஆர். ரகுமானின் சகோதரி ரெஹானா,  உலக தமிழ் சங்கத்தின் தலைவர் சந்தோஷ், இயற்கை ஆர்வலர் சுல்தான் அகமது இஸ்மாயில், பின்னணி பாடகர் வேல் முருகன் ஆகியோரும் பயணித்தனர். கோவை வந்த அவர்களை பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதி காரி அனுஷா ரவி வரவேற்றார். வெள்ளி யன்று  கோவையில் உள்ள பல்வேறு இடங் களை சுற்றிப்பார்க்கும் மாணவர்கள் இரவு ரயில் மூலமாக சென்னை திரும்புகின்ற னர்.விமானத்தில் முதல்முறையாக பறந்த குழந்தைகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.