சேலம், ஆக.23- இளம்பிள்ளை பகுதியில், தூய்மை பாரதம் திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள வந்த அதிகாரிகள் முன்னிலையில், பெண் களை தரக்குறைவாக பேசிய அதிகாரியை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம்பிள்ளை அருகே மகுடஞ்சாவடி ஒன்றியம் தப்பகுட்டை ஊராட்சி பகுதியில் மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத் தினை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தி ருந்தனர். அப்போது பொதுமக்கள் யாரும் இல்லாமல் ஏரி வேலை செய்யும் 10 பெண்கள் மட்டும் இருந்ததால் ஆய்வு செய்த வந்த அதிகாரிகள் பொதுமக்கள் எங்கே என்று கேள்வி எழுப்பினார். அப்பொழுது உடன் வந்திருந்த மகுடஞ்சாவடி மண்டல வட்டார இணை ஆணையாளர் மோகன் ராஜ், பெண்களை தரக்குறைவாக தகாத வார்த்தைகளில் திட்டியதாக தெரிகிறது. இதனால் அதிகாரிகளுக்கும், பெண் களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தப்பகுட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயசீலன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பெண் களை தரக்குறைவாக பேசிய மோகன்ராஜ் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.