tamilnadu

img

மலைவாழ் மக்கள் காத்திருக்கும் போராட்டம்

சாம்பூர் எஸ்டேட் சோதனைச் சாவடியை திறந்திடுக

உதகை, அக்.23- குன்னூர் அருகே சாம்பூர்  எஸ்டேட்டில் போடப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மீண்டும் திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, மலைவாழ் மக்கய் சங்கத்தின் தலைமை யில் மலைவாழ் மக்கள் சோத னைச்சாவடியை முற்றுகை யிட்டு காத்திருக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொலக் கம்பை அருகே மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் மூப்பர் காடு, ஊஞ்சளார் கொம்பை, பால்மாரா லீஸ், மருதல் கொம்பை ஆகிய கிராமங்களில் போதிய அடிப் படை வசதிகள் இல்லை. மேலும், இக்கிராமத்தில் உள்ள மக்கள்  மருத்துவ வசதி உள்ளிட்டவை களுக்கு 25  கிலோ மீட்டர் தொலை வில் உள்ள முள்ளிக்கு பரளி பவர்ஹவுஸ் வழியாக செல்வது வழக்கம். இதேபோல், பில்லூர் டேம், கெத்தைகாடு, வெள்ளியங் காடு, பூச்சி மரத்தூர், நெல்லி மரத் தூர், சிறு கிணறு, காரமடை ஆகிய பகுதிகளில் உள்ள தங்கள் உற வினர்களின் வீடுகளில் நடை பெறும் சுக, துக்க நிகழ்வுகளுக்கு அவ்வழியே  செல்வது வழக்கம்.  இச்சூழலில், இங்குள்ள சாம் பூர் எஸ்டேட்  அருகில் காரமடை  வனத்துறையினரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கடந்த ஆறு மாத காலமாக  பூட்டி வைக் கப்பட்டுள்ளது. இதனால், இம் மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் மருத்துவ வசதிக்கும், உற வினர்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மாவட்ட வன அலுவலருக்கும், மாவட்ட ஆட்சி யரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை.  இந்நிலையில் சாம்பூர் எஸ்டேட் அருகில் போடப்பட்டுள்ள சோத னைச் சாவடியை திறக்கக்கோரி புதனன்று அப்பகுதியைச் சேர்ந் துள்ள மலைவாழ் மக்கள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைமயில் திரண்டு வந்து சோதனைச்சாவடி முன்பு அமர்ந்து காத்திருக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்ட செயலாளர் டி.அடையாள குட் டன், கோவை மாவட்ட செயலா ளர் வி.சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.  இதனையடுத்து கொலக் கம்பை (பொறுப்பு) காவல் ஆய் வாளர் டி.அம்மா துரை, காரமடை வனச்சரகர் ஆ.சுப்பிரமணியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வரும் அக்.30 ஆம் தேதிக்குள் இரண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படுத்துவது எனவும், தற் காலிகமாக அவசர தேவை களுக்கு காரமடை வனசரக பாரஸ் டர் ஆ.சுப்ரமணியன் தொலை  பேசியில் தொடர்பு கொண்டு பேசி கேட்டை  திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 5 மணி நேரத் திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் அறிவித்து அனைவரும் கலைந்துசென்றனர். முன்னதாக, இப்போராட்டத் தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, குன்னூர் இடைக் கமிட்டி செயலாளர் ஜெ.ஆல் தொரை, உதகை இடை கமிட்டி செயலாளர் எல்.சங்கரலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் டி. சுப்பிரமணி,  மலைவாழ் மக்கள்  சங்கத்தின் மாவட்ட பொருளா ளர் குமார் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இப் போராட்டத்தில் மலைவாழ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், மலை வாழ் மக்கள் சங்க மாவட்ட துணை தலைவர் ருக்குமணி நன்றி கூறி னார்.