கோவை, ஆக.6- காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம், மக்கள் விரோத மசோ தாக்களை மத்திய அரசே திரும்பப் பெறு என்ற முழக்கத்தை முன்வைத்து செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியல் அமர்ந்த மோடி தலைமையி லான மத்திய பாஜக அரசு, நடை பெறும் நாடாளுமன்ற கூட்ட தொட ரில் தொடர்ந்து மக்கள் விரோத மசோ தாக்களை தாக்கல் செய்து வருகிறது. குறிப்பாக, கார்ப்பரேட்டுகளின் நல னுக்காக சாலை போக்குவரத்து மசோதா திருத்தம், தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் மற்றும் நதிநீர் ஆணைய மசோதா, மருத்துவ ஆணைய மசோதா என அடுத்தடுத்து மக்கள் விரோத நட வடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் உட்சமாக காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தும், அம்மாநிலத் திற்கு வழங்கியுள்ள 370 சட்டப்பிரி வின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வா யன்று தமிழகம் முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எஸ்.கருப்பையா, என்.ஜெய பாலன், வி.பெருமாள், கே.மனோ கரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர். வேலுசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட் டத்தில், காஷ்மீர் மாநில மக்க ளின் உரிமைகளை பாதுகாப்போம், மத்திய அரசே மக்கள் விரோத மசோ தாக்களை திரும்பப்பெறு என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆவேச முழக் கங்களை எழுப்பினர். பொள்ளாச்சி திருவள்ளுவர் திட லில் நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய் குமார், மாவட்டக்குழு உறுப்பி னர் துரைசாமி, ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரமசிவம், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தின் மாநில கழக வெளியீட்டு செய லாளர் இரா.மனோகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் நன்றி கூறினார். மேட்டுப்பாளையம் தாலுகா குழு வின் சார்பில் காரமடையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ஏ.எல்.சீராஜூதீன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.பாலமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் சி.பெரு மாள், ராஜலட்சுமி உள்ளிட்டோர் உரையாற்றினர். கடும் மழையிலும் ஏராளமானோர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், உதகையில் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி கண்டன உரையாற்றினர். உதகை கமிட்டி செயலாளர் சங்கர லிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.சுந்தரம், சஞ்சீவராஜ் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். எருமாடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏரியா குழு செய லாளர் கே.ராஜன் தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் யோ.கண்ணன், ஹமீது மாஸ்டர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத் திரம் பேருந்து நிறுத்தம் அருகில் நகர செயலாளர் பி. சுந்தரராஜன் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், ப.மாரிமுத்து, ஜி.பழனிச்சாமி, ஆர்.விஜயராகவன், ஆர்.கோமதி, சி.பரம சிவம், எஸ்.சுப்பிரமணியன், ஏ.எம்.முனுசாமி, தாலுகா செயலாளர் என். நாச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பி னர்கள், மாவட்ட தொழிற்சங்க நிர் வாகிகள், இடை கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
இதேபோல், கோவை ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசியல் சாச னத்தின் 370 பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங் கேற்று மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.