நாமக்கல், ஜூலை 23- திருமணிமுத்தாறு காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு சட்டமன்ற முன் னாள் உறுப்பினருமான மோளி பள்ளி தோழர் வி.ராமசாமி 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட் டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் மல்லசமுத்திரம் ஒன்றிய குழு சார்பில் திருமணி முத்தாற்றில் காவிரி உபரி நீரை விட வலியுறுத்தி இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச் சரத்தில், வெள்ளப்பெருக்கு ஏற் படும் காலத்தில் மேட்டூர் அணை யிலிருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை செத்த மலை வழியாக கால்வாய் வெட்டி திருமணிமுத் தாற்றில் உபரி நீரை விட வேண்டும். அழிந்து வரும் விவசாயத்தையும், குடிநீர் பற்றாக்குறையும் போக் கிட உபரிநீர் திட்டத்தை நிறை வேற்றிட வேண்டும். குறிப்பாக, நாமக்கல் மாவட் டத்தில் 32 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து விவ சாயம் செய்திடவும், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண் டும். மாவட்டத்தில் நிலத்தடிநீர் பற்றாக்குறையான ஒன்றியமாக எலச்சிபாளையம் உள்ளது. இதனை மாற்றிட இத்திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். கடந்த 2013 ஆம் ஆண்டில் திருமணிமுத்தாறு திட் டத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்த ரூ.1,134 கோடி நிதியை இத்திட்டத்திற்கு உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்து குடிநீர் பற்றாக்குறையை யும், விவசாயத்தையும் பாதுகாத் திட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன. முன்னதாக, இப்பிரச்சார பய ணத்தை எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செய லாளர் எஸ்.கந்தசாமி கொடிய சைத்து துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து எலச்சிபாளையம், மாணிக்கம்பாளையம், கட்டி பாளையம், வேலகவுண்டம்பட்டி, எர்ணாபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பிரச்சார பய ணம் மேற்கொண்டனர். இப்பிரச் சார பயணத்திற்கு சிபிஎம் எலச்சி பாளையம், மல்லை ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் தலைமை வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி நிறை வுரையாற்றினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கோமதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குனர் பி.மாரிமுத்து மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் எலச்சிபாளையம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.