கோவை, நவ. 16- கோவை அவிநாசி சாலையில், கோல்டு விங்ஸ் அருகே ராஜேஸ்வரி என்ற அனுராதா (21) தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் நடப்பட்டிருந்த அ.தி.மு.க கொடி கம்பம் விழுந்து விபத்துக் குள்ளானதில் அவருடைய இரண்டு கால்களும் பாதிக்கப் பட்டது. இந்நிலையில் அனுராதா கோவை ராயல் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ராயல் கேர் மருத்துவமனை நிர்வாகம் வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப் பட்டிருந்த ராஜேஸ்வரி என்ற அனுராதாவுக்கு இடதுகால் ரத்த நாளங்கள் சிதைவடைந்து விட்டதால். அவரின் இடது கால் அவர் குடும்பத்தார் சம்மதத்தோடு அகற்றப்பட்டது என கூறி உள்ளனர். இந்த நிகழ்வு மிகவும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.