tamilnadu

img

அமெரிக்காவின் ஏகாதிபத்திய வெறி

கோவை, ஜூன் 23– வெனிசுலாவில் சீர்குலைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் கோவை யில் நடைபெற்றது. வெனிசுலாவில் அமெரிக்க ஏகா திபத்தியத்தின் குழிபறிப்பிற்கு எதிராக திரள்வோம் என்கிற தலைப் பில் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய தொலைபேசி நிலைய தலைமை அலுவலகக் கூட்டரங்கில் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் சார்பில் சனியன்று சிறப்புக் கருத் தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.முகமதுஜாபர் தலை மையில் நடைபெற்ற இக்கருத்தரங் கில் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் வரவேற்றார்.  இதில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் செயலா ளர் கே.சுவாமிநாதன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில செயலா ளர் எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.   உலகம் முழுவதும் பெரியண்ணன் மனப்போக்கோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு துருவ உலகைக் கட்டியமைக்க முயல்கிறது. இதன் ஒருபகுதியாக வெனிசுலா இடது சாரி அரசை சீர்குலைக்கும் விதமாக குழிபறிக்கும் முயற்சியை மேற் கொண்டு வருகிறது. இன்று வெனி சுலா, நாளை இந்தியா என்கிற ஆபத்தை உணர்ந்து இந்திய தொழி லாளி வர்க்கம் வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுராவின் அரசிற்கு ஆதரவுக் கரத்தை நீட்டுவோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நட வடிக்கைகளை அம்பலப்படுத்தி, அதற்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்டி வெனிசுலாவைக் காப்போம் என கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் வலியுறுத்தப் பட்டது.  இக்கருத்தரங்கில் கோவை, நீல கிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, தரும புரி ஆகிய மாவட்ட சங்கங்களின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்ற னர். முடிவில் மாவட்ட பொருளாளர் சௌ.மகேஷ்வரன் நன்றி கூறினார்.