சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
கோவை, அக். 21- கீழடி நிலத்தை பாதுகாக்கப் பட்ட பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும் என எழுத்தாளரும், நாடா ளுமன்ற உறுப்பினருமான சு.வெங் கடேசன் வலியுறுத்தினார். கோவையில் நன்னெறிக் கழ கம் சார்பில் கீழடி வரலாற்றுப் பார்வை என்கிற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் ஞாயிறன்று நடை பெற்றது. அமைப்பின் தலைவர் இயகோகா.என்.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு செயலாளர் பி.ஜெயசந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச் சியில் பங்கேற்று கீழடியின் ஆய்வு கள் குறித்தும், அதன் பயணம் குறித் தும் எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றி னார். அப்போது அவர் பேசுகையில், கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கும், அந்நிலம் மாற்று பயன்பாட்டுக்கு மாறாமல் தடுப்பதற்கும் கீழடி நிலத்தை பாது காக்கப்பட்ட பகுதியாக அரசு அறி விக்க வேண்டும். தேசிய அளவில் சிந்து சமவெளி நாகரீகம் குறித்து பேசியதற்குப்பிறகு கீழடி நாகரீகம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கீழடி பண்டைய காலத்தின் மரபை கடத்தி இன்றைய காலகட்டத்திற்கு பல தகவலை கொண்டு சேர்க்கும். மேலும், கீழடியில் செய்யப் பட்டுள்ள ஆய்வு பெரிய உயிரினத் தின் வால் முனை மட்டுமே. அடுத்த டுத்த ஆய்வுகளில் தமிழ் வரலாற் றின் உடல், தலை, முகம் கிடைக்கும். ஆரம்பத்தில் கீழடி அகழாய்வில் அமர்நாத் ராமகிருஷ்ணன் இட மாற்றம் செய்யப்பட்டதற்கும், ஸ்ரீராமன் 80 சதவிகித நிதியை பயன் படுத்தாததற்கும் அரசியல் பின் புலமே காரணம். ஆகவே, கீழடி நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதி யாக அரசு அறிவித்து, தமிழகத்தில் தொல்லியல் சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.