கோவை, ஆக.24- கோவையில் சிகிச்சைக்கு பயந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய பெண் இறந்துவிட்டதாக அளித்த தகவ லால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் தெரு அன்னபூரணி அம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் முகமது யூசுப். இவருடைய மனைவி சாய்ராபானு. முகமது யூசுப்பின் குடிப்பழக்கத்தால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வியாழனன்று நடைபெற்ற தகராறில் ஆத்திரம் அடைந்த முகமது யூசுப் மனைவி சாய்ராபானுவை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற் பட்டது. இதனை சாய்ராபானுவின் அம்மா அரிதா பேகம் தடுக்க முயன்றார். இதில் அவருக்கு வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. இதனை தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அரிதா பேகம் வெள்ளியன்று மாலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மருத்துவர்களின் சிகிச் சைக்கு பயந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். இதனையறியாத மருத் துவர்கள் அவர் இறந்துவிட்டதாக பொள் ளாச்சி காவல்துறையினரிடம் தகவல் தெரி வித்துள்ளனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்வது சம்பந்தமாக காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது அரிதாபேகம் சிகிச்சைக்கு பயந்து மருத்துவமனையிலிருந்து வெளி யேறியது தெரியவந்தது. ஆனால் மருத்து வர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர் கள் இறந்துவிட்டதாக காவல்துறையின ருக்கு தகவல் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.