tamilnadu

img

முன்னாள் பிரதமர்களின் குடும்பத்துக்கு இனி சிறப்பு பாதுகாப்பு இல்லை

புதுதில்லி,நவ.23-   முன்னாள் பிரதமர்களின் குடும்பத்துக்கு இனிமேல் சிறப்பு பாதுகாப்பை விலக்குவ தற்காக, அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) சட்டப்படி, பிரதமர், அவருடைய குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்புக்குழுவின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பாதுகாப்பை விலக்குவதற்காக, அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 20 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த திருத்தம் அடங்கிய மசோதா, அடுத்த வாரம் நாடாளுமன்ற மக்கள வையில் தாக்கல் செய்யப்படுகிறது. இத்தக வலை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்கள வையில் தெரிவித்தார். சமீபத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பி னர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.