tamilnadu

img

நீலகிரி மலைக்காய்கறிகள் வரத்து சரிவு உருளைக்கிழங்கு விலை கடும் உயர்வு

மேட்டுப்பாளையம், ஆக. 13- மழை பாதிப்பால் நீலகிரி மலைக் காய்கறிகள் வரத்து சரிவால் உருளைக் கிழங்கு விலை கடும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் 110 உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. மேலும் வெள்ளைப்பூண்டு மற்றும் மலைக்காய்கறிகளுக்கு என  தனித்தனியாக ஐம்பதிற்கும் மேற் பட்ட மண்டிகள் இயங்கி வருகின்றன. இங்கு நீலகிரியில் விளையும் உருளைக் கிழங்குகள் மற்றும் வெள்ளைப்பூண்டு,  கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பீன்ஸ் என அனைத்து வகை மலைக்காய்கறிகளும் லாரிகள் மூலம் தினசரி டன் கணக்கில் கொண்டு வரப்படும். பின்னர் இவை இங்குள்ள மண்டிகளில் தரம் பிரிக்கப்பட்டு ஏலம் மூலம் விலை நிர்ணயிக்கப்பட்டு மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலத் திற்கும் மேலாக நீலகிரி மாவட்டத் தில் கனமழை பெய்து வருவதால் அங் குள்ள விவசாய நிலங்களிலும் தோட்டங் களிலும் பெருமளவு தண்ணீர் தேங்கியுள் ளன. மேலும் வெள்ள பாதிப்பால் சாலை கள் சேதமடைந்து போக்குவரத்தும் பாதிக் கப்பட்டுள்ளது. இதனால் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அறுவடை செய்ய இயலாமல் இவற்றின் வரத்து குறைந்து விலை உயர்ந்து வருகிறது. மேலும், இந்த சீசனில் தினசரி 500 முதல் 600 டன் வரை உருளைக்கிழங்கு வரத்து இருக்கும் நிலையில் தற்போது மழை பாதிப்பால் தினசரி 30 முதல் 50 டன் வரை மட்டுமே கிழங்கு வரத்து உள்ளது. இதனால் 45 கிலோ கொண்ட ஒரு உருளைக்கிழங்கு மூட்டை ரூ.900 முதல் ரூ. 1,400 வரை இருந்தது. தற்போது ரூ. 2 ஆயிரம்  முதல் ரூ,2,800 வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல், பூண்டு மற்றும் பிற மலைக்காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருவதாகவும், நீலகிரியில் மழை குறைந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் சீரானால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள்  கூறுகின்றனர். விவசாயிகளுக்கு பலனில்லாத இந்த  விலையேற்றத்தால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வியா பாரிகளும் கவலையடைந்துள்ளனர்.