tamilnadu

img

மாதர் சங்கம் புகார் எதிரொலி அனுமதியின்றி இயங்கி வந்த தங்கும் விடுதிக்கு சீல் - அதிகாரிகள் அதிரடி

கோவை, ஜூன் 25-  பாலியல் வக்கிர எண்ணத்து டன் விளம்பரம் செய்து அனுமதி யின்றி செயல்பட்டு வந்த தங்கும் விடுதி குறித்து மாதர் சங்கம் அளித்த  புகாரின் எதிரொலியாக கோவை யில் இயங்கிவந்த தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.  கோவை நவ இந்தியா பகுதி யில் ஒயோ என்ற சர்வீஸ் அபார்ட் மெண்ட் என்ற பெயரில் தங்கும் விடுதி இயங்கி வந்தது. அந்நிறுவ னம் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தனர். பாலியல் அத்து மீறல் நடவடிக்கைகளுக்கு அங் கீகாரம் அளிக்கும் வகையில் வெளி யாகி இருந்த ஓயா நிறுவனத்தின் விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் வகையில் உள்ள இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும், சம்பந்தப்பட்டவர்களை கைது  செய்ய வேண்டும் என வலியுறுத் தினர்.  இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி தெற்கு வட்டாட்சியர் தேவனா தன் தலைமையிலான அதிகாரி கள் செவ்வாயன்று ஒயோ அபார்ட் மெண்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளிடம் பல்வேறு விபரங்களை சேகரித்தனர். இதில் இந்நிறுவனம் சட்டத்திற்கு புறம் பாக செயல்படுவதை உறுதி செய்த அதிகாரிகள், அந்நிறுவனத்திற்கு அதிரடியாக சீல் வைத்தனர்.  மாவட்ட ஆட்சியரின் இந்த துரித நடவடிக்கைக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் , கோவை மாநகரில் இதுபோன்ற பல நிறுவ னங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது என்றும், அதனை காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக கண்காணித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ஏ.ராதிகா வலியுறுத்தியுள்ளார்.