tamilnadu

img

கைதியின் பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய போலீஸார்

கோவை, டிச. 5- கைதியின் பிறப்புறுப்பில் காவல் துறையினர் ஆசிட் ஊற்றி துன்பு றுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (28). இவர் திருப்பூர் பகுதியில் விசைத்தறி வேலை செய்து வருகிறார். இந்நிலை யில் கடந்த அக்டோபர் மாதம் 27 ம்  தேதி கஞ்சா விற்ற வழக்கில், தேவாலா  காவல் துறையினர் அவரை கைது  செய்தனர். அப்போது காவல் துறை யினர் சிவராஜை அடித்து, உதைத்து சித்ரவதை செய்ததாகவும், பிறப்பு றுப்பு மற்றும் உடலில் ஆசிட் ஊற்றி  துன்புறுத்தியதாகவும் புகார் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக கோவை மத்திய சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த சிவராஜ்  செய்தியாளர்களிடம் கூறுகையில், கஞ்சா வழக்கில் கைது  செய்த காவல் துறையினர் தன்னை காவல் நிலையத்தில் தலைகீழாக கட்டி வைத்து அடித்தும்,  உதைத்தும் கொடு மைப்படுத்தினர். மேலும் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், என்னை நிர்வாணப்படுத்தி வயிறு, பிறப்பு றுப்பு, தொடை,  ஆசனப்பகுதி ஆகிய இடங்களில் ஆசிட்டினை ஊற்றியதில் உடல் வெந்துள்ளது. இதுதொடர்பாக யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டினர். உதவி ஆய்வாளர் ஜெய பிரகாஷ் உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மேற்கு மண்டல காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம் உள்ளிட் டோரிடம் புகாரளிக்க உள்ளதாக  தெரிவித்தார்.