அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
தருமபுரி, மே 29- தருமபுரியில் நர்சிங் கல்லூரி துவக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகள் கொண்ட மகப் பேறு தாய்-சேய் நல கட்டடப் பணி களை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியதா வது, சென்னை சாய் கல்வி மருத் துவ ஆராய்ச்சி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வென்டிலேட்டர், தெர்மல் ஸ்கேனர், என்-95 முக கவசங்கள், பிபி கிட் உள்ளிட்ட உபகரணங் களை வழங்கியுள்ளனர். அவர்க ளுக்கு தருமபுரி மாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தருமபுரி அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் செயல் பட்டு வரும் கொரோனா பரி சோதனை மையத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 462 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. இவர்களில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 7363 நபர் களுக்கு பரிசோதனை செய்ததில் 8 நபர்களுக்கு தொற்று உறுதியா னது. அவர்களில் 5 பேர் குணம டைந்து வீடு திரும்பியுள்ள நிலை யில், தற்போது 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் இறப்புகள் ஏதும் நிகழவில்லை. மேலும், தருமபுரி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளில் அதிக அளவில் பிரச வங்கள் நடைபெற்றுள்ளது. இந் நிலையில், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத் தில் 5060 சதுர மீட்டர் அளவில் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கி ணைந்த மகப்பேறு தாய்-சேய் நல கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கட்டிட பணிகள் விரைவாக நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப் படும் என்றார். மேலும், முதுநிலை மருத்துவப் பாட பிரிவுகள் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், நர்சிங் கல்லூரி சிப்காட்டுக்கு ஒதுக்கப் பட்ட இடத்தில் 50 ஏக்கரில் அமைப் பது குறித்து முதலவரின் கவனத் திற்கு கொண்டு சென்று அமைக்கப் படும் எனவும் அமைச்சர் தெரி வித்தார்.