tamilnadu

img

விவசாயிகளை தரக்குறைவாக பேசிய வனத்துறையினரை சிறைபிடித்த பொதுமக்கள்

சேலம்,டிச.9- ஆத்தூர் அருகே வனவிலங்கு கள் விளை நிலங்களை சேதப்படுத் தியுள்ள நிலையில் அலட்சியமாக செயல்படுவதை கண்டித்தும், விவ சாயிகளை தரக்குறைவாக பேசி யதை கண்டித்தும் வனத்துறையி னரை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெரிய கல்வராயன் மலைப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள அய்யங்காடு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை நிலங்களில்  நெல், மரவள்ளிகிழங்கு, மக்கா சோளம், மஞ்சள், பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள னர். தற்போது பருவமழை தொடங் கியதையடுத்து இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நன்றாக விளைந்து வருகிறது. இந்நிலையில் பெரிய கல்வராயன் மலை வனப்பகுதியில் இருந்து காட்டெருமைகளும், காட்டு பன்றிக ளும் ஊருக்குள் புகுந்து அப்பகுதி யில் உள்ள நெல், மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர் களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவதால் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டெருமைகள் மற்றும் காட்டு பன்றிகளை தடுத்து வேலி அமைத்து தர வேண்டுமென அப்பகுதி விவ சாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் பல முறை மனு கொடுத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் எந்த வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. 

இந்நிலையில் திங்களன்று அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து 20 காட்டெருமைகள்  வெளியேறி அப்பகுதியில் முகா மிட்டு விளை நிலங்களை சேதப் படுத்தியுள்ளது. இது குறித்து அப் பகுதி விவசாயிகள் ஆத்தூர் வனத் துறையினருக்கு தகவல் தெரி வித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேத மடைந்த விளை நிலங்களை பார்வையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கும், வனத்துறையி னருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது, விவசாயிகளை வனத் துறையினரை தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மேலும் ஆவேசமடைந்த விவசாயிகள் வனத்துறையினரை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதற்கிடையே அப்பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் ஒருவர்  மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீடீரென தீக்குளிக்க முயன்றார். இதையறிந்த ஆத்தூர் போலீசார் மற்றும் மாவட்ட வனத்துறை துணை இயக்குனர் முருகன் தலைமையிலான அதிகா ரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிக ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வன விலங்குகள் ஊருக்குள் வராமல் வனப்பகுதியில் வேலி அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.  இதனிடையே முகாமிட்டுள்ள காட்டெருமைகள் துரத்தியதில் கீழே விழுந்து காயமடைந்த ஒரு பெண் உள்பட மூன்று பேரை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.