tamilnadu

ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ. 50 லட்சத்திற்கு ஏலம்

கடலூர், டிச. 9- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அதிமுக பிரமுகர் சக்திவேல் ரூ.50 லட்சத்திற்கு ஏலம்  எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிக பிரமுகர் முருகன் ரூ.15 லட்சம் தருவதாக கூறி ஊராட்சி மன்ற துணைத் தலை வர் பதவியை ஏலம் எடுத்தார். ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி  அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்வதற்கு பதிலாக  இதுபோன்று சில ஊராட்சிகளில் தலைவர்கள் நேரம் விட்டு  அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கே அந்தப் பதவி கொடுப்பதால் ஜனநாயக முறை குழி தோண்டி புதைக்க படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடலூரில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாத வன் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் எழுப்பிய போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது குறித்து  உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.