tamilnadu

img

அதிமுக அரசிற்கு மக்களைப் பற்றி கவலையில்லை : மு.க.ஸ்டாலின்

கோவை, மே 16-அதிமுக அரசிற்கு மக்களை பற்றிக் கவலையில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட அப்பநாயக்கன் பட்டி பகுதியில் வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று நடந்து சென்று வீடு, வீடாக வாக்குசேகரித்தார். இதையடுத்து செலக்க ரச்சல் கிராமத்திலும் ஸ்டாலின் திண் ணை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது குடிநீர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக அப்பகுதி மக்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதன்பின் பொதுமக்களிடம் மு.க. ஸ்டாலின் பேசுகையில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காததே காரணம். திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். விவசாயக் கடன்கள் ரத்துசெய்ய ப்படும், கேஸ்விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்ச னை உள்ளது. அதிமுக ஆட்சி எந்த பிரச்சனைகளை பற்றியும் கவனிக்கா மல் தங்களை காப்பாற்றிக் கொள்வதில் மட்டும் கவனமாக உள்ளது. இதேபோல், பிரதமர் மோடி அளித்தஎந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராம னின் மகன் தலையீடு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மர்மமரணம், கொடநாடு கொலை, கொள்ளை, பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆகியவை குறித்து விசாரணைநடத்தப்படும். ஆகவே, அதிமுக ஆட்சியை அகற்ற திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.