சேலம், ஆக.20- சேலம் உருக்காலை தனியார் மயத்தை கண்டித்து, உருக்கா லைக்கு நிலம் கொடுத்தோர் சங்கத்தினர் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து 16 ஆவது நாளாக காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் உருக்காலை தமிழ கத்தில் நவரத்தின அந்தஸ்தில் உள்ள மத்திய அரசாங்கத்தின் உருக்கு தொழிற்சாலையாக இயங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய பாஜக அரசு, சேலம் உருக் காலையை தனியார்மயமாக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடு பட்டு வந்தது. மேலும் பொதுத் துறைகளை தொடர்ச்சியாக விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் உருக்காலையை விற்க தற் போது சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என வலியுறுத்தி கடந்த சில ஆண்டு களாக சேலம் உருக்காலை பாது காப்பு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் தனியார்மயமாக்கும் முடிவில் மத்திய அரசு பின்வாங்காமல் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரு கிறது. இதில் சேலம் உருக்காலை, மேற்கு வங்கத்தில் அலாய் இரும் பாலை, கர்நாடகம் பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும் பாலை ஆகிய மூன்று ஆலை களையும் ஒட்டு மொத்தமாக விற்பனை செய்யும் இந்த முடி விற்கு நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையொட்டி சேலம் உருக் காலை தொழிலாளர்கள் கடந்த 16 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இதில் கார்ப்பரேட் நிறுவ னங்கள் ஆலைக்குள் நுழையமுடி யாத படிதொடர்ந்து இருபத்து நான்கு மணி நேரமும் தொழிலா ளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இத்தொழி லாளர்களுக்கு ஆதரவாக, சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த வர்கள் சங்கத்தின் சார்பில் நாக ராஜன் தலைமையில் காத்தி ருக்கும் போராட்டத்தில் பங்கேற் றனர். இதில் சேலம் உருக்காலை பாது காப்பு ஒருங்கிணைப்புக் குழு செய லாளர் சுரேஷ்குமார், இணை ஒருங் கிணைப்பாளர் பி.பன்னீர்செல்வம், ஐஎன்டியுசி தேவராஜன், எல்டி எஃப் பெருமாள், அண்ணா தொழிற் சங்கம் முருகேசன், பாட்டாளி தொழிற்சங்கம் வெங்கடாச்சலம், சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த சங்கத்தினர் மற்றும் எஸ்சி எஸ்டி, ஓபிசி சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று முழு நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா
சேலம் உருக்காலை தனி யார்மயத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து மாலை நேர தர்ணா போராட் ட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.முருகபெருமாள், சுகாதார பணி யாளர் சங்க மாநிலச் செயலாளர் வி.செல்வம், மோட்டார் வாக னங்கள் பழுது நீக்கும் சங்க செய லாளர் சுரேஷ், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்டச் செய லாளர் ஞானசௌந்தரி, மாவட்டத் தலைவர் டி.பரமேஸ்வரி உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர்.