தருமபுரி, ஆக.9- தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில பிரதி நிதித்துவ பேரவை (ஆக.10-11) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தருமபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெறுகிறது. சனியன்று (ஆக.10) நடைபெறும் நிகழ் விற்கு மாநிலத் தலைவர் எம்.செளந்தர ராஜன் தலைமை வகிக்கிறார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் வரவேற்புரையாற்றுகிறார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழ்நாடு பிரிவு பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன் துவக்கி வைக்கிறார். கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.கோவிந்த ராசு, மாநிலப் பொருளாளர் சை.மு.சலீம், மாநிலச் செயலாளர் என் வேலாயுதம் உரை யாற்றுகின்றனர். முன்னாள் ஸ்தாபக தலைவர் என்.இளங்கோ சிறப்புரையாற்று கிறார். முன்னாள் பொதுச்செயலாளர் ஆ. இரத்தினம், முன்னாள் மாநிலத் தலைவர் கோ.தியாகராஜன், அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ்.தமிழ்ச் செல்வி உள்ளிட்டோர் வாழ்த்துரை யாற்றுகின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மு. அன்பரசு நிறைவுரையாற்றுகிறார். கவிஞர் நா.முத்துநிலவன் தலை மையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. புதுகைபூபாளம் குழுவினரின் நையாண்டி தர்பார் கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் சங்கப்பணி நிறைவு பாராட்டு விழா, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு பாராட்டுவிழா ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. நிறைவாக, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.பழனியம்மாள் நன்றி கூறு கிறார்.