tamilnadu

img

வடக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு

கோவை, ஜூன் 10–  கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் திங்களன்று நன்றி  அறிவிப்பு பிரச்சாரம் மேற்கொண்ட பி.ஆர்.நடராஜன் எம்.பி,.க்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.  திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் வாக்காளர்களுக்கு  நன்றி அறிவிப்பு பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன்ஒருபகுதியாக திங்களன்று கோவை வடக்கு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கோவை  மாநகராட்சி 11 ஆவது வார்டு  கே.கே.புதூரில் துவங்கி 10, 44, 45,49,48 ஆகிய வார்டுகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்க ளுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., நன்றி தெரிவித்து உரையாற்றி னார்.  இப்பயணத்தில் திமுகவின் பகுதி கழக செயலாளர் லோகநகா தன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மேயர் காலனி வெங்க டாசலம், மதிமுக சார்பில் கிருஷ்ண சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் ஜேம்ஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பிரேம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு நகரக்குழு செயலாளர் என்.ஆர்.முருகேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கூட்டணி கட்சியினர், பொதுமக் கள் மிகுந்த உற்சாக வரவேற்பளித்த னர்.