இ சேவை மையத்தில் சர்வர் கோளாறு தாராபுரம் பொதுமக்கள் பாதிப்பு
தாராபுரம், ஆக. 27 - தாராபுரம் இ சேவை மையத்தில் சர்வர் கோளாறு கார ணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பெற விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாயன்று வழக்கம்போல் இ சேவை மையம் திறக்கப்படும் முன்பே பொதுமக்கள் காத்திருந்தனர். இசேவை மையம் திறக்கப் பட்டவுடன் காத்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென மெயின் சர்வரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது. பகல் 1 மணி வரை காத்திருந்தும் சர்வர் கோளாறு சரிசெய்யப் படாததால் டோக்கன் பெற்று சான்றுகளுக்காக விண்ணப் பிக்க காத்திருந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாலை வரை இந்த நிலையே நீடித்தது. சர்வ ரில் ஏற்படும் கோளாறுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபாநாயகர் தொகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
அவிநாசி, ஆக. 27- அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படும் நிலை தொடர்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ப.தனபாலின் அவிநாசி தொகுதிக்குட்பட்ட அவிநாசி பேரூராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சி யில் இரண்டாவது குடிநீர் திட்டத்திலிருந்து 15 லட்சம், மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலம் 11 லட்சம் என மொத்தம் 26 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப் பட வேண்டும். ஆனால் தற்போது குடிநீர் வடிகால் வாரியத் தில் இருந்து 16 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப் படுகிறது. அதேநேரம், குடிநீர் வடிகால் வரியாம் ஆயிரம் லிட்டருக்கு 9 ரூபாய் 96 பைசா என்ற அளவில் மாதம் தோறும் 26 லட்சம் லிட்டர் குடி தண்ணீருக்கு பேரூராட்சி யிடம் கட்டணம் வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் தற்போது 10 நாட்களாக குடிதண்ணீர் என்பது பேரூராட்சியில் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, நான்கு நாட்களாக மின்சார பாதிப்பு காரணமாக குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை என தெரி வித்தனர். 11வது வார்டு முன்னாள் கவுன்சிலர் தேவி கூறுகையில், 18 வார்டுகளிலும் முறையாக குடிநீர் வருவதில்லை. மக்கள் மிகவும் தவித்து வருகிறார்கள். நீலகிரி பகுதியில் கடுமையாக மழை பெய்து மேட்டுப்பாளையம் ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் சபாநாயகர் தொகுதியான அவிநாசி பேரூராட்சியில் குடிநீர் பற்றாக் குறை நிலவுகிறது என்றார். மின்தடை காரணமாக தண்ணீர் வருவதில்லை என அதி காரிகள் கூறுகின்றார்களே எனக் கேட்டபோது, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை எனக் கூறுகிறார்கள். குடிநீர் வாரிய அதிகாரிகள் மின்சாரப் பிரச்சனை காரணமாக குடிதண்ணீர் வருவ தில்லை எனக் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. உடனடி யாக குடிநீர் வடிகால் வாரியம் முறையான குடிநீர் வினி யோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லா விட்டால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக கூறினார்.