ஈரோடு, ஜூலை 17- பவானி அருகே தனிநபரின் வசதிக்காக குடி யிருப்புகளே இல்லாத பகுதிக்கு தார் சாலை அமைக்கும் வகையில் திட்டப்பணிகள் மாற்றப் பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், மைலம்பாடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை மூலம் ரூ.31.71 லட்சத்தில் போத்தநாயக்கனூர் முதல் கருப்புசாமி கோவில் வரை சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பணி கருப்புசாமி கோயில் வரை செல்லாமல் ஸ்ரீ அரங்கநாதர் நகர் வழியாக சாலையை மாற்றி பணி செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கும் ஸ்ரீ அரங்கநாதர் நகரில் 34 வீட்டுமனைகள் மட்டுமே உள்ளது. இங்கு, இது வரை யாரும் குடியேறவில்லை. இச்சூழலில் குடியி ருப்புகளே இல்லாத அரங்கநாதர் நகருக்கு சாலை அமைக்கும் பணி மேற்கொண்டு வருவது தனி நபர் வசதிக்காக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, போத்த நாயக்கனூரில் இருந்து கருப்பு சாமி கோவில் வரை சாலை மேம்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பவானி தாலுகா செயலாளர் எஸ். மாணிக்கம் தலைமையில் பவானி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளிக் கப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.எம்.பாலு, மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் பி. மாதையன் உள்பட பலர் உடனிருந்தனர்.