தருமபுரி, நவ.1- தமிழ்நாடு உதயமான தினத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி செங்கொடிபுரத்தில் உற்சாக மாக கொண்டாட்டப்பட்டது. நவம்பர் 1 தமிழ்நாடு மாநிலம் உதய மான தினம். இந்த நாளை தமிழ் வளர்ச்சி நாளாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கொண்டாட முடிவு செய் தது. இதையொட்டி வெள்ளியன்று தமிழகம் முழுவதும் தமிழ், தமிழர், தமிழக வளர்ச்சியை முன்னிறுத்தி கருத்தரங்குகள், பொதுக்கூட் டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி செங்கொடி புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் கே. குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, இரா.சிசுபாலன், டி.எஸ்.ராமச்சந்திரன், எஸ்.கிரைஸா மேரி, சோ.அருச்சுனன், நகரசெய லாளர் ஆர்.ஜோதிபாசு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. பூபதி, ஜி.நாகராஜன், ஏ.ஜெயா ஆகி யோர் பங்கேற்று பேசினர். இதேபோல், தமிழியக்கம் சார்பில் தருமபுரி முத்து இல்லத்தில் தமிழ்நாடு பிறந்த தின விழா நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில், பாரதி புத்த காலய பொறுப்பாளர் இரா.சிசு பாலன், கீரைபிரபாகரன், கவிஞர் பொன்முடி, ஆசிரியர் கூத்தப்பாடி பழனி ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினர்.
நாமக்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாமக்கல் மாவட்ட குழுவின் சார்பில் குமாரபாளையத்தில் தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம் நடை பெற்றது. இக்கருத்தரங்கிற்கு குமார பாளையம் நகர செயலாளர்.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். நகர குழு உறுப்பினர் என்.சக்திவேல் வரவேற்புரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், தமிழ் வளர்ச்சி குறித்து கருத்துரையாற்றினார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், கே.தங்கமணி, எஸ். தமிழ்மணி,சு.சுரேஷ் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.