இளம்பிள்ளை, செப். 2- சங்ககிரி அருகே சாமியார் சரவணன் தற் கொலை தொடர்பாக மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்து வரு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யினர் தேவூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே யுள்ள புளியம்பட்டி குண்டாங்கல்காடு பகு தியைச் சேர்ந்தவர் சாமியார் சரவணன். இவர் பேய் ஓட்டுவது, தாயத்து கட்டு வது, மாந்திரீகம் செய்வது என்கிற பெயரில் பணம் பறித்து வருவதாக ஏமாற்றப் பட்டோர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந் துள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் தேவூர் காவல்துறை உதவி ஆய்வா ளர் அந்தோணி மைக்கேல் தலைமை யிலானபோலீசார் சாமியாரிடம் விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், அவமானம் தாங்காத சாமியார் சர வணன் போலீசார் தாக்கியதால் நான் தற் கொலை செய்து கொள்கிறேன் என்று வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து, அங்குள்ள இந்து அமைப்பினர், சாமியார் சரவணன் தற்கொலையை பயன் படுத்தி அப்பகுதியில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் சங்ககிரி ஒன்றிய செயலாளர் பழனி யப்பன் செவ்வாயன்று தேவூர் காவல் நிலை யத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
இதில், சரவணன் தற்கொலை சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பினர் சமூக வலைதளங்களில் மத கலவரத்தை தூண் டும் வகையில் பேசி வருகின்றனர். ஆகவே, இவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது வழக் குப்பதிவு செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. முன்னதாக, இம்மனுவினை அளிக்கை யில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பழ.ஜீவானந்தம் உள் ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.