பொள்ளாச்சி, மார்ச் 5- பொள்ளாச்சி தாலுகா பகுதிகளில் தென்னை நார் தொழிற்சாலைகளில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதிகளில் 700க்கும் மேற்பட்ட தென்னை நார் மற்றும் பித் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சில தொழிற்சாலைகள் ஜி.எஸ்.டி, வரி செலுத்தாமல் இயங்கி வருவதாக கிடைத்த தகவலையடுத்து, ஜி.எஸ்.டி அதிகாரி கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் நெகமத்தை அடுத்த கள்ளிப்பட்டி புதூரிலுள்ள சூர்யா காயர்ஸ் மற் றும் சோபியா காயர்ஸ், வேலு பைபர்ஸ், வெற்றி விநாயக் காயர்ஸ் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தப் பட்டது. இதுகுறித்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கூறுகையில்; சில தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டபோது பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியும், ஜி.எஸ்.டி, வரி செலுத் தாமல் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதுபோன்று பல தொழிற்சாலைகள் வரி ஏய்ப்பு செய்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, இந்த ஆய்வானது தொடரும். இன்னும் சில தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தனர்.