சேலம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்
சேலம், செப். 23- சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதி மாவட்டங்களில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அந்தஸ்தில் இருப் பதால் நோயாளிகளின் வருகை எண் ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், நோயாளிகளின் எண் ணிக்கைக்கு ஏற்ப போதிய அடிப்படை வச திகள் மருத்துவமனையில் இல்லை என நோயாளிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரன் ஆகியோர் திங்களன்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகை யில், சேலம் மருத்துவமனையில் கழிவறை, குடிநீர், நோயாளிகளின் படுக்கை வசதி, மருத்துவர் மற்றும் செவிலியரின் எண் ணிக்கை என அனைத்திலும் குறைபாடு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு மற்றும் சுகாதார துறை கூடுதல் கவனம் எடுத்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலி ருந்து மருத்துவர்கள், மருத்துவமனைக்கு கேட்கும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.