உடுமலை, ஜூலை 11- மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட கல்வித்துறை அதி காரியிடம் வியாழனன்று மனு அளித்தனர். உடுமலை வட்டம், குடி மங்கலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பயின்றுவருகின்றனர். கடந்த இரண்டாண்டு களாக மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச மடிக்கணினி வழங்காமல் உள்ளனர். இந்நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 14) இப்பள்ளியில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வு நடை பெற இருக்கிறது. ஏற்கனவே இரண் டாண்டுகள் வழங்காமல் உள்ள மாண வர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கல்வித் துறை அதிகாரியிடம் வியாழனன்று மாணவர்கள் மனு அளித்தனர். இது குறித்து மாணவர்கள் கூறு கையில், கடந்த இரண்டாண்டுகளாக பிளஸ்1,பிளஸ்2 மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படவில்லை. தற்போது பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வரும் அமைச்சர் மற்றும் அரசு அதி காரிகளிடம் முறையிடுவோம் என தெரி வித்தனர்.