தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாட்டை முன்னிட்டு திருப்பூரில் 100 பள்ளிகளில் மாணவர்கள் - விஞ்ஞானி/வல்லுநர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெள்ளியன்று காலை வித்யவிகாஸ்னி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் ஜிடிஎன் கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் துறைப் பேராசிரியர் சரவணன் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை குறித்து கலந்துரையாடினார். மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை கேட்டறிந்தனர்.