குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதனன்று கோவை அரசு கலைக் கல்லூரியில் கருப்பு பட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய இந்த போராட்டாத்தில் ஏராளமான மாணவர்கள் கருப்பு பட்டை அணிந்து கல்லூரிக்குள் சென்றனர். இதில் மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் அசார் ,செயலாளர் தினேஷ்ராஜா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.