உதகை, மே 9-அங்கீகராம் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூடாது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.பள்ளிக் கல்வித் துறையின் கீழ்நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் சுயநிதி பள்ளிகள் இலவசகட்டாய கல்வி உரிமை சட்டப்படி துவக்க மற்றும் தொடர் அங்கீகாரத்துடன் செயல்பட வேண்டும். ஆனால் உதகை ஒன்றியத்தில் ரெக்ஸ் இளம் மழலையர் பள்ளி எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் அங்கீகாரம் பெறவில்லை. இதேபோல் மஞ்சூர் சிஸ்டர்ஸ் அல்போன்சா இளம் மழலையர் பள்ளி,நசரெத்கான்வென்ட் இளம் மழலையர் பள்ளி, உதகை வுட்சைடு சிபிஎஸ்இ இளம் மழலையர் பள்ளி,பிங்கர் போஸ்ட்டில் உள்ள ஸ்டார் பிரேசைடு இளம் மழலையர் பள்ளி,கப்பத்தொரை பிரைசைடு இளம்மழலையர் பள்ளி மற்றும் உதகைஜேஎஸ்எஸ் சிபிஎஸ்இ இளம்மழலையர் பள்ளிஆகியவைஎல்கேஜிமற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு அனுமதி பெறவில்லை. செயின்ட் மேரீஸ், புளும்மிங் பட்ஸ்,கிட்ஸ் ஆர் கிட்ஸ், மவுண்ட் கிட்ஸ்,பார்ன் செக்கர்ஸ், நிசாம் இளம் மழலையர் பள்ளி மற்றும் நிசாம் சிபிஎஸ்இ இளம் மழலையர் பள்ளிகள் அங்கீகாரம் பெறாதவையாகும்.இதேபோல் உதகையில்கெட்ஜி, புரூக்லின், லிட்டில் கிங்ஸ்,இன்பான்ட் ஜீசஸ் மழலையர்மற்றும் தொடக்கப்பள்ளி, கோத்தகிரி அம்மா கிட்ஸ், சிஎஸ்ஐ வெஸ்லிமழலையர் மற்றும்தொடக்கப்பள்ளிகளும் எல்கேஜி மற்றும் 5ம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறவில்லை. குன்னூர் ஒன்றியத்தில் நேசனல்மாடல் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி, பெர்ன்ஹில், வெலிங்டன் கன்டோன்மென்ட், இயர்லி ஸ்டெப்பிங் ஸ்டோன், கிங்ஸ்வே மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிற்கும், 5ம் வகுப்புமாணவர் சேர்க்கைக்கும் அனுமதிபெறவில்லை. புனிதடோம்னிக்,ஆங்கூர் வித்யா மந்திர், எம்ஆர்சி, சின்னவண்டிசோலை கிட்ஸி இளம் மழலையர் பள்ளி மற்றும் கோத்தகிரி ஒன்றியம் மிளிதேனில் உள்ள நேசனல் மாடல் இளம் மழலையர் பள்ளிகள் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் துவக்க அனுமதி பெறவில்லை. தொடர் அங்கீகாரமும் இன்றி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளில் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறக் கூடாது. அவ்வாறு மாணவர் சேர்க்கை நடைபெற்றால் ஏற்படும் விளைவுகளுக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.