நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கோபால், பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் தங்கமணி உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.