tamilnadu

img

நீதி கேட்டு போராடிய மாணவர், வாலிபர், மாதர் சங்கத்தினர் கைது

பாத்திமா லத்தீப் நிறுவன கொலை

ஈரோடு, நவ. 26- சென்னை ஐஐடி மாணவி பாத் திமா லத்தீப் மரணத்திற்கு நீதி கேட்டு  திங்களன்று பெருந்துறையில் போராட் டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப் பினர், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா  லத்தீப் மரணத்திற்கு நீதி கேட்டு பெருந் துறை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி கோரியி ருந்தனர். ஆனால், பெருந்துறை காவல் துறையினர் தீடீரென ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து தடையை மீறி போராட்டம் நடத்திய மாணவர், வாலிபர் மற்றும் மாதர் சங்கத்தினரை காவல்துறையினர் அராஜகமான முறையில் கைது செய்தனர். மேலும், இந்திய தண்டனை சட்டம் 143, 141 ஆகிய பிரிவுகளின் கீழ் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். முன்னதாக, இந்த போராட்டத்திற்கு மாதர் சங்கத்தின் தாலுகா செயலாளர் கே.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாதன், முன்னாள் தலைவர் ஜி.பழனிசாமி, தாலுகா செயலாளர் சி.அஜித்குமார், மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.வினிஷா, மாவட்ட செயலாளர் கோபிகிருஷ்ணன் மற்றும் பரத்குமார், சி.நவீன்குமார், பங்கஜம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.