மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு
திருப்பூர், நவ. 27 - வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நவம்பர் 29ஆம் தேதி (வெள்ளியன்று) ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சி.மூர்த்தி தலைமையில் புதன்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: கடந்த ஒரு வார காலமாக வெங்காய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. விவசாயிகளிடம் குறைவான விலையில் கொள்முதல் செய்து விட்டு நுகர்வோரிடம் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. குறிப்பாக மொத்தசந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரையும், பெரியவெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.90 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் இதைவிட கூடுதல் விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருபுறம் வெங்காயத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நியாயமான விலை தருவதில்லை, மறுபுறம் நுகர்வோ ருக்கும் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இடைத்தரகர்கள், மொத்த வியாபாரிகள் வெங்காய விலையைத் தீர்மானித்து இருதரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே மத்திய அரசு மற்றும் தமிழக அரசு உணவு வழங்கல் துறை தலையிட்டு வெங்காய விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காய விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உத்தரவாதம் செய்து, இடைத்தரகர்கள், மொத்த வியாபாரிகள் விலையைத் தீர்மானிக்கும் நிலை யைக் கட்டுப்படுத்தி சந்தையில் நுகர்வோருக்கும் நியாயமான விலையில் வெங்காயம் கிடைப் பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், வெங்காய விலை யைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நவம்பர் 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற் பட்ட இடங்களில் ஆர்ப்பாட்ட இயக்கம் நடத்துவது என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு தீர்மானித்துள்ளது.