tamilnadu

அருவங்காடு தொழிற்சாலையை பாதுகாக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 27 ல் மறியல் போராட்டம்

உதகை, ஆக. 20- நீலகிரி மாவட்டத்திலுள்ள அருவங்காடு தொழிற்சாலையை பாதுகாக்க வேண்டும் என வலியு றுத்தி சிஐடியு, விவசாய சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி யன்று மறியல் போராட்டம் நடை பெறவுள்ளது. இதுகுறித்து சிஐடியு நீலகிரி மாவட்ட செயலாளர் ஆர்.ரமேஷ், விவசாய சங்க மாவட்ட செயலா ளர் ஏ.யோஹண்ணன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி.மணி கண்டன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கே.பி.கெளசல்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, நாடு  முழுவதும் உள்ள 41 ராணுவ தள வாட மற்றும் பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை ஒரே நிறு வனமாக மாற்றுவது என்ற கொள்கை முடிவை மத்திய பாஜக  அரசு எடுத்துள்ளது. இந்த முடிவு என்பது இந்நிறுவனங்களை படிப் படியாக தனியார் மயமாக்கும் முயற்சியின் முதற்படி ஆகும். எனவே, மிகவும் ஆபத்தான இம்முடிவை மத்திய அரசு உடன டியாக கைவிட வேண்டும். நாட் டின் பாதுகாப்பில் அர்ப்பணிப் போடு பணியாற்றும் முப்படை களைப் போலவே இந்த தொழிற் சாலைகள் நான்காம் படையாக விளங்குகிறது. போர் காலங்க ளிலும், எல்லைப் புற பதற்றமான நேரங்களிலும் நமது படைகளுக்கு தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்களை தயாரித்து வழங்கும் இந்நிறுவனங்கள் சந்திரயான், மங்கள்யான் உள் ளிட்ட செயற்கை கோளுக்கான உபகரணங்களையும் தயாரித்து வழங்கி வருகிறது. கார்கில் போரின் போது அனைத்து தொழிற்சாலைகளும் இரவு பகல் பாராது உழைத்ததன் விளைவா கத்தான் அந்த வெற்றி சாத்திய மானது. மேலும், நாடு முழுவதும் உள்ள இத்தகைய தொழிற்சாலைகளின் கட்டுமானத்திற்காக நமது விவ சாயிகள் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கியுள் ளனர். எனவே இவை மக்கள் சொத் தாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்து நாட்டிற்கு வழங்கி வருகின்றன. நூறாண்டுகளுக்கு முன்பாக துவங்கப்பட்ட அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையும் நாட் டின் பாதுகாப்பிற்கு குறிப்பிடத் தகுந்த பங்களிப்பை செய்திருக் கிறது. எனவே, அரசின் கட்டுபாட்டில் உள்ள நிறுவனங்களை கார்ப்ப ரேஷனாக மாற்றுவது என்ற பெய ரில் தனியார்மயப்படுத்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தும், அதே நேரத் தில் இத்தகையதொரு முடிவு தேசத் தின் பாதுகாப்போடும் இணைந் தது என்பதால், போராட்டக்களத் தில் இருக்கும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி யன்று அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகம் முன்பு  மாபெரும் மறியல் போராட் டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட் டத்தில் மக்களும் பெரும் திரளான எண்ணிக்கையில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டுமென கேட் டுக் கொள்கிறோம்.