தருமபுரி, ஆக.17- உணவு பொருட்கள் தயாரிப்பாளர்கள் உரிமம் மற்றும் பதிவு செய்யாதபட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படு மென உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரித் துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் நகராட்சி மற்றும் ஒன்றியம் வாரியாக பல்வேறு இடங்களில் உணவு பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் களுக்கு உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக. தருமபுரி நகர வர்த்தகர் மஹாலில் சனி யன்று நடைபெற்ற முகாமில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா தலைமை வகித்தார். நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய உணவுப்பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், நகர வணிகர் சங்க தலைவர் உத்தண்டி, செய லாளர் நாகராஜன், விநியோக பணி சங்க தலைவர்கள் மயில் வாகனம், சுகுணா சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்முகாமில் மருத்துவர் ஏ.பானுசுஜாதா பேசுகையில், இந்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர்கள், உணவகங்கள், மளிகை மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரக் கடைகள், பேக்கரிகள், இறைச்சி கடைகள், துரித உணவகங்கள், டீ கடை, நட மாடும் உணவு வணிக கடைகள், சாலையோர உணவு கடைகள், பால், குடிநீர், குளிர்பானக் கடைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் உணவுப் பாது காப்பு உரிமம் மற்றும் பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உணவுப்பாதுகாப்பு தர நிர்ணய விதிகளின்படி தண்டனைக்குரிய குற்ற மாகும். எனவே தங்கள் நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு உரிமம் பதிவு பெறாதவர்கள் நகராட்சி மற்றும் ஒன்றிய உணவுப்பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பத்தை வழங்கி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.