tamilnadu

மக்களையும், விவசாயத்தையும் பாதிக்கின்ற உயர்மின் கோபுர திட்ட பணியை தடுத்து நிறுத்துக

பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

திருப்பூர், பிப்.27- மக்களையும், விவசாயத்தை யும் பாதிக்கின்ற வகையில் விளை நிலங்களில் உயர்மின் கோபு ரங்கள் அமைப்பதை உடனடி யாக தடுத்து நிறுத்த வேண்டுமென  கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித் துள்ளார்.  திருப்பூர் மாவட்டம், பல்லடத் தில் உயர்மின் கோபுரகளுக்கு எதிராக விவசாய சங்கங்களின் கூட்டியக்கம், பாரத் பெட்ரோலி யத்தின் ஐடிபிஎல் எண்ணெய்க் குழாய் திட்டத்தால் பாதிக்கப் படும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பங்கேற்று பேசிய தாவது, தமிழ்நாட்டில் 700 கேவி  மின் கேபிள்களை விளை நிலங் களுக்கு மத்தியில் எடுத்துச்  செல்லும் திட்டத்தினால் தமிழ கத்தின் மேற்கு பகுதியில் அமைந் துள்ள 8 மாவட்ட விவசாயிகள்  கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். இதை எதிர்த்து நீண்ட  போராட்டத்தை நடத்தி வரும்  விவசாயிகளை கைது செய்வதும்,  சிறையில் அடைப்பதும் போன்ற  பல்வேறு வகையான கொடுமை களை அனுபவித்து வரு கிறார்கள். இந்நிலையில் பல்லடம்  ஒன்றியம்அனுப்பட்டி கிரா மத்தில் பவர்கிரிட் நிறுவனம்  அமைக்கிற உயர் மின் கோபு ரத்தை ஆய்வு செய்கின்ற வகை யில் ஈரோடு நாடாளுமன்ற  உறுப்பினர் அ.கணேசமூர்த்தி,  திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.ஜோதிமணி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தோம்.  இதில்   இப்பகுதியில் 400 மெகா வாட் அளவிற்கான மின்சாரம்  கொண்டு செல்லும் பாதையில்  எந்தவித இணைப்பும் இன்றி,  எங்கள் உடம்பில் மின்சாரம்  பாய்வதைஇண்டிகேட்டர் மூலமாக சோதனை செய்து  அறிந்து கொண்டோம். மேலும் எவ்வித இணைப்பும் இன்றி மின்   விளக்கு எரிகிறது என்பதையும்  அறிந்து அப்பகுதி பொதுமக் களுக்கு எடுத்துக் கூறுனோம்.

ஆகவே, பவர் கிரிட் நிறு வனம் தமிழ்நாட்டு மக்களையும்,  விவசாயிகளையும் பாதிக்கின்ற,  ஏமாற்றுகின்ற விதத்தில் செயல் பட்டு வருகிறது.  இதனை நாடாளு மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின் றோம். ஆகவே, மாவட்ட நிர்வா கமும்,  தமிழக அரசாங்கமும் விவசாயிகளை வஞ்சிகின்ற இத் திட்டத்தை கைவிட வேண்டும். அதுமட்டுமன்றி உயர்மின் அழுத் தத்தினால் பொதுமக்களுக்கு  மிகப்பெரிய உடல்நலக்கேடு  ஏற்படுகின்றது. இந்த பிரச்சனை யில் மாநில அரசாங்கம் நேரடியாக  தலையிட்டு 8 மாவட்ட விவ சாயிகள் அனைவரையும் பாது காக்க வேண்டும். மின்காந்த  அலையின் மூலமாக பொதுமக்க ளுக்கு பலவகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ச்சி  என்பது அனைத்து மக்களின் உடல் ஆரோக்கியம் சம்பந்தப் பட்ட பிரச்சனை, இவர்களை அழித்துவிட்டு தனியார் நிறுவ னங்களுக்கு சாதகமாக செயல்படு வது வளர்ச்சி இல்லை. இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசி னார்.