tamilnadu

கொரோனா தொற்று பாதித்தவர்கள் வீட்டில் தகரம் அடிப்பது நிறுத்தம்: நோட்டீஸ் மட்டும் ஒட்டப்படும்

கோவை, செப். 11- கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்கள் தனி வீடுகளில் வசித்தால் அவர்களின் வீடுகளை தகரம் கொண்டு அடைப்பதற்கு பதிலாக இனி நோட்டீஸ் ஒட்டப்படும்  என மாந கராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டவர்கள் சிகிச்சை மையங்க ளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்ற னர். அறிகுறி இன்றி தொற்று உறுதி  செய்யப்பட்டவர்களுக்கு,  உரிய வசதி  இருந்தால் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்கவும், அந்த வீட்டை சேர்ந்த நபர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்கவும், அவர்க ளது வீடு தகரம் கொண்டு மறைக்கப் பட்டு வந்தது.  

இந்நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனி வீடுகளில் வசித்தால், அவர்களின் வீடுகளை தக ரம் கொண்டு மறைப்பதற்கு பதிலாக, ‘இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்ற நோட்டீஸ் மட்டுமே ஒட்ட கோவை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகை யில், கோவை மாநகராட்சி பகுதியில் யாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அவர்கள் வசித்த வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியி ருப்புகள் 14 நாட்களுக்கு தகரம் கொண்டு மறைக்கப்பட்டு வந்தது. தற் போது, இதில் சிறிய மாற்றம் செய்யப் பட்டுள்ளது.  இதன்படி ஒரு தெருவில் தனி வீட்டில் வசிக்கும் நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டால், அவரது வீடு இனி தகரம் கொண்டு மறைக்கப்படாது.

அதற்குப்  பதிலாக, இது தனிமைப் படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீஸ் ஓட்டப்படும். இதனை, மீறி அந்த வீடுகளில் வசிப்ப வர்கள் வீடுகளை விட்டு வெளியே வந் தால் அவர்கள் மீது போலீஸ் மூலம் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு தெருவில் ஒன்றுக் கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனி வீடு இல்லாமல் பல வீடுகள் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கண் டிப்பாக அந்த வீடு தகரம் கொண்டு அடைக்கப்படும். இவ்வாறு அதிகாரி கள் கூறினர்.