tamilnadu

img

தனியார் சொகுசு விடுதிகளை மூட நடவடிக்கை

கொரோனா வைரஸ் எதிரொலி

சத்தியமங்கலம், மார்ச் 14- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை ஊராட்சி யில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக் கையாக தனியார் சொகுசு விடுதிகளை மூட முடிவு செய்யப் பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை, கேர்மா ளம், மாவள்ளம், தலமலை, தொட்டபுரம், ஆசனூர் ஆகிய மலைக் கிராமங்களில் தனியார் சொகுசு விடுதிகள் ஏராளமா னவை அமைந்துள்ளன. கோடை துவங்கி விட்டாதல் தமி ழகம், கர்நாடகம், கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த சொகுசு விடுதிகளில் தங்கி செல்கின்றனர். குறிப்பாக தலமலை, ஆசனூரில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் வெளியூர் பயணிக ளின் வருகை அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் கார ணமாக தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளபட்டு வருகிறது. இயற்கையான சூழலில் உள்ள தல மலை கிராமத்தில் கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் வெளியூர் பயணிகள் தலமலை கிராமத்தில் தங்கு வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தனியார் சொகுசு விடுதிளை தற்காலிகமாக மூடவும், தலமலை ஊராட்சி தலைவர் நாகன் அனைத்து சொகுசு விடுதிக ளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதேபோல், ஆச னூர்மலை கிராமத்திலும், அங்குள்ள தங்கும் விடுதிகளிலும் வெளியூர் பயணிகள் தங்குவதற்கும் அனுமதி மறுக்கப்ப டுவதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாக ஆசனூர் ஊராட்சித் தலைவர் சித்ரா சுப்பிரமணி யம் தெரிவித்துள்ளார்.