ஏற்காடு, பிப்.25- ஏற்காடு அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசு பேருந்தை கிராம மக்கள் சிறைபிடித்தனர். சேலம் மாவட்டம், ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ., தூரத்தில் முளுவி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த வர்கள் வேலைக்காகவும், மாணவர்கள் மேல்நிலை கல்வி மற்றும் கல்லூரிப் படிப் பிற்காகவும் ஏற்காட்டிற்கு தான் வர வேண்டிய நிலை உள்ளது. இக்கிராமத் திற்கு செல்லும் தார்ச்சாலை கரடியூர் பிரிவு முதல் சேதமடைந்துள்ளது. இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை அதிகாரி களிடம் முறையிட்டு உள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் செவ்வாயன்று அரசு பேருந்தினை சிறை பிடித்தனர். இத்தகவலறிந்த ஏற்காடு பொறுப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் குண சேகர் மற்றும் ஏற்காடு காவல் ஆய்வாளர் ரகு ஆகியோர் முளுவி கிராமத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த்தையில் சாலை சீரமைக்கப்படும் என உறுதி யளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென் றனர். இந்நிலையில், ஏற்காடு சேர்மேன் சாந்த வள்ளி அண்ணாதுரை மற்றும் துணை சேர்மேன் சேகர், ஒன்றிய அதிகாரிகளுடன் முளுவி கிராமம் சென்று, சேதமடைந்த சாலையை பார்வையிட்டனர். பின்னர் அதிகாரிகள், அந்த சாலையை அளவீடு செய்து திட்ட மதிப்பீடு உருவாக்கி, அனு மதிக்காக உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.