tamilnadu

img

ரயில் தரைபாலத்தில் குளம் போல் தேங்கிய மழைநீர் - சீரமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி, நவ.14 - பொள்ளாச்சி அருகே மாக்கினாம் பட்டியில் ரயில்வே தரைபாலத்தில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற் கிறது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் மாற்று பாதை யில் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் உள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் பொதுமக்கள் ரயில் பாதையை கடந்து செல்வதற்காக தரைபாலம் அமைக்கப்பட்டது. கடந்த சில நாட் களாக பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வரு வதால் ரயில்வே பாலம் முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஒட்டிகள்  இப்பகுதியை கடந்து செல்ல  மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய சூல்நிலையில் தள் ளப்பட்டுள்ளார்கள். எனவே பொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக தண் ணீரை அப்புறப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.