கோபி, செப்.13- ஈரோடு மாவட்டத்தில் ஸ்ரீஹரி கோட்டாவின் சார்பில் விஞ் ஞான கண்காட்சி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள் ளார். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் நகராட்சிக் குட்பட்ட கிருஷ்ணாநகர் பகுதி யில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் உள் விளை யாட்டு அரங்கு கட்டிப்பணியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தொடங்கி வைத்தார். இதன்பின் கோபிசெட்டிபாளை யம் ஊராட்சி ஒன்றிய அங்கன் வாடி மைய அலுவலகத்தில் அங் கன்வாடி பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப் படும் விலையில்லா கைபேசி களை வழங்கினார். இதனையடுத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய் தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், அங்கன்வாடி பணி யாளர்களுக்கு கைபேசி வழங்க ஆணை பிறப்பித்துள்ளதை அடுத்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பி னர்கள், அமைச்சர்கள் வழங்கி வருகின்றனர். மேலும், ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து விஞ்ஞானி கள் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்து இரண்டு நாட்கள் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள் ளனர். இதில் விண்வெளி ஆராய்ச்சி குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டுத் துறை யில் ரூ.64 கோடி ஒதுக்கப்பட் டுள்ள நிதியின் மூலம் கபாடி, வாலிபால், கிரிக்கெட் விளை யாட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை எங்கெங்கு அதிகம் உள் ளதோ அங்கு விளையாட்டு மைதா னம் அமைக்கும் திட்டம் நிறை வேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, இவ்விழாக்க ளில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுற வுத்துறை அலுவலர்கள் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.