திருப்பூர், பிப். 28 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊத்துக்குளி ஆர்.எஸ். கிளை சார்பாக ஊத்துக்குளி இரயிலடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.5000 வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. வரும் கல்விஆண்டில் ஊத்துக்குளி இரயிலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான வைப்புத் தொகை செலுத்துவதற்காக இந்த நிதியை வாலிபர் சங்க ஊத்துக்குளி ஆர்.எஸ். கிளை வழங்கியது. வாலிபர் சங்க தாலுகா கமிட்டி உறுப்பினர் கு.பால முரளி, தமுஎகச கிளைச் செயலாளர் மு.நந்தகுமார் ஆகியோர் பள்ளித் தலைமை ஆசிரியர் பூபாலனிடம் வெள்ளியன்று இந்த நிதியை வழங்கினர். நிதியைப் பெற்றுக் கொண்டு தலைமை ஆசிரியர் பூபாலன் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.