கோவை, ஜூலை 30 - தொழில் நஷ்டம் காரணமாக நூற்பாலை உரிமையா ளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் பார்சன் அபார்ட் மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (43). இவர் கரு மத்தம்பட்டி பகுதியில் சக்தி ஸ்பின்னிங் மில் என்ற நூற் பாலை நடத்தி வந்தார். இதனிடையே தொழில் நஷ்டம் கார ணமாக கடந்த சில நாட்களாக விஜயகுமார் விரக்தியடைந்த தாக தெரிகிறது. இந்நிலையில், அவர் செவ்வாயன்று ஸ்பின் னிங் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் விஜயகுமாரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின்னர், உறவினர்களி டம் ஒப்படைக்கப்பட்டது.