தருமபுரி, மே 18-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் தருமபுரி நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இக்கருத்தரங்கத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் எம்.யோகராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் வரவேற்றார். மாநில செயலாளர் எம்.செளந்தரராஜன் “வையத் தலைமைக் கொள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட இணைசெயலாளர் பி.எஸ்.இளவேணில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜி.பழனியம்மாள், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் சி.காவேரி,பொதுநூலகத்துறை ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.