கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புப் பேரவை கூட்டம் சனியன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம், நெல்லையில் சாதிய வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க தோழர் அசோக்கின் குடும்ப பாதுகாப்பு நிதியாக முதற்கட்டமாக 61 ஆயிரத்து 550 ரூபாயை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார் வழங்கினார். அப்போது மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.