தமிழக முதல்வர் பங்கேற்பு
சேலம், செப்.28- சங்ககிரியில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங் கினார். சேலம் மாவட்டம், சங்ககிரியில் தமிழக முதலமைச் சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வரவேற் றார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக் களை பொதுமக்களிடமிருந்து முதல்வர் பெற்றுக் கொண்டார். மேலும் பெறப்பட்ட மனுக்களில் உடனடி தீர்வாக 10 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க ஆணை வழங்கப்பட்டது. இம் முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என முதல்வர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ரூ.5 கோடியே 4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.