tamilnadu

img

சூலூரில் அதிநவீன தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக போர் விமானம்

கோவை, மே 27 -  சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக போர் விமானம் புதனன்று இணைக்கப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இந்திய விமானப் படையின் 18வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் ஏற்கனவே தேஜஸ் மார்க் 1 ஐ.ஓ.சி வகையை சேர்ந்த 20 விமானங்கள் இருக்கின்றன. இந் நிலையில் இதில் கூடுதல் வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக போர் விமானம்  சூலூரில் உள்ள இந்திய விமான தளத்தில் இந்திய விமான படை தலைவர் ஏர்சீப் மார்சல் பதோரியா முன்னிலையில் இந்திய விமான படையில்  இணைக்கப்பட்டது.  இவ்விழாவில் பேசிய இந்திய விமானபடை ஏர்சீப் மார் ஷல் பதோரியா கூறுகையில், சூலூர் விமானப்படை தளத்தில் இரண்டவது தேஜாஸ் எப்.ஒ.சி விமானம் இணைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித் தார். தேஜாஸ் விமானம் அதிநவீன தொழில் நுட்பத்தில் முதன்மையானது எனவும், இது இந்தியாவில் தயாரிக் கப்பட்டது. நமக்கு பெருமைக்குள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும், இந்திய விமானபடையினருக்கு தேவையான உபகரணங்கள், விமானங்கள் உள்நாட்டில் தயாரிக்க தனியார் தொழில்துறையினர் மற்றும் சிறு, குறு தொழில்துறையினர் முன் வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

;